”வசனம்லாம் நல்லாயிருக்கு ஆனா, என் கண்ணீர்ல காதல் தெரிஞ்சதுன்னு சொன்னீங்களே அது பொய்”
”ஒரு தடவை காதலிச்சவனுக்குதான் காதலை பத்தி நல்லாவே தெரியும், அன்னிக்கு உன் கண்ல நான் காதலை பார்த்தேன் ரோஜா”
”இல்லை இல்லை இல்லை”
”நான் உன்னை தப்பா புரிஞ்சிக்கிட்டு உன் மனசு நோகடிக்கற மாதிரி பேசினது உண்மைதான் ஆனா, அதை நான் தெரிஞ்சே செய்யலை, நீ யார்ன்னு உண்மை தெரிஞ்ச பின்னாடி நான் என் தப்பை உணர்ந்துட்டேன், சொல்லப்போனா உன்கிட்ட மன்னிப்பு கேட்க கூட தயாராகி உன்கிட்ட சொல்ல வந்தேன் ஆனா வார்த்தை வரலை“
”ஏனாம்”
”எல்லா பேச்சும் பேசிட்டு மன்னிப்புன்னு ஒத்த வார்த்தை சொல்லி எந்த பிரயோசனமும் இல்லையே ரோஜா, செய்த தப்புக்கு பிராயசித்தம் செய்யனும்ல“
”அதுக்கு”
”அதான் என் மனசையே உன் காலடியில வைக்கிறேன் என்னை ஏத்துக்க” என அவளின் முன் தெருவென்றும் பாராமல் மண்டியிட்டு கெஞ்சி கேட்க அதை அவள் சற்றும் எதிர்பார்க்கவில்லை அவசர அவசரமாக அக்கம் பக்கம் பார்த்தாள், நல்லவேளை யாரும் இல்லை அதில் அவள் நிம்மதியாகி போக அதே நேரம் வெங்கி தன் காருடன் அவ்விடம் வந்து நின்று ஆனந்த் செய்வதைக் கண்டு அதிர்ந்து அவசரமாக காரை விட்டு இறங்கி ஆனந்திடம் வந்து நின்றான். வெங்கியை கண்டதும் ஆனந்த் பயந்தான்
”மாமா என்ன நீங்க இந்த பக்கம் வந்திருக்கீங்க“