(Reading time: 18 - 35 minutes)
Oru veedu iru vaasal
Oru veedu iru vaasal

அவங்க வந்துடுவாங்க“

   

”யாரு”

   

”ம்ம் எல்லாம் சொன்னாதான் உங்களுக்கு புரியுமா என்ன நான் சாப்பிட்டு முடிச்சிட்டேன், இப்ப கிளம்பறேன் நீங்க எப்ப வர்றீங்களோ வாங்க நீங்க வர்றவரைக்கும் ஆபீசை நான் கட்டிக்காப்பாத்தறேன்” என உற்சாகமாக சொல்லிவிட்டு அங்கிருந்து சென்றான். அவனின் உற்சாகத்தைக் கண்டு ஆனந்தி வியக்க வெங்கிக்கு கவலையாக இருந்தது

   

”இன்னொரு காதல் தோல்வியை இவனால தாங்க முடியுமான்னு தெரியலையே” என மனதில் நினைத்தபடியே சாப்பிட பிடிக்காமல் கிளம்ப அவனைத் தடுத்தாள் ஆனந்தி

   

”ஏங்க சாப்பிடலையா“

   

”பசிக்கலை”

   

”இப்படி சொன்னா எப்படி”

   

”புரிஞ்சிக்க ஆனந்தி” என கடுமையாக பேசிவிட ஆனந்திக்கு ஒரு மாதிரியாகிவிட்டது வெங்கியோ அவசரமாக கிளம்பிச் சென்றான்

   

ஆனந்தோ நேராக ஆபீசுக்கு செல்லாமல் ரோஜா வீடு இருக்கும் தெரு பக்கம் சென்றான். அவளின் வீட்டின் முன் அவளது ஸ்கூட்டி இருந்தது அதைக் கண்டதும் மனம் மகிழ்ந்தான்

   

”அப்பாடா இன்னும் என் தேவதை கிளம்பலை பார்க்கலாம் எப்படி ட்ரஸ் பண்ணிக்கிட்டு வர்றாள்ன்னு” என ஆவலாக காத்திருக்க சில நொடிகளில் அவளும் வந்தாள்

   

அவன் எதிர்பார்த்தது பாவாடை தாவணியில் வருவாள் என்று ஆனால் அவளோ புடவையில் வந்தாள், அந்த புடவையில் அவள் அழகாக இருந்தாள் பார்க்க ஏதோ பள்ளிகூட டீச்சர் போன்று தோன்றியது ஆனந்திற்கு உடனே கலகலவென சிரித்துவிட்டு வண்டி ஹாரனை அடிக்க அந்த சத்தம் கேட்டு திரும்பி பார்த்து திடுக்கிட்டாள் ரோஜா

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.