”இவனுக்கு வேற வேலையே இல்லை போல இரு வரேன்” என சொல்லிக் கொண்டே காரிடம் வர அவள் வருவதைக் கண்ட ஆனந்தும் ஆவலாக காரை விட்டு இறங்கி ஹீரோ போல போஸ் கொடுத்தான், அவனது நடை உடையைக்கண்டு ஒரு நொடி அவள் வியந்தாள் மறுநொடியே அவன் மீது கோபம் கொண்டாள்
”உங்களுக்கு வேற வேலையே இல்லையா, எப்ப பாரு இந்த பக்கமே வர்றீங்களே”
”இதுதான் குறுக்கு வழி அதான் வந்தேன்”
”பொய் இது சுத்து வழின்னு எனக்கு தெரியும்”
”அதான் தெரியுதுல்ல அப்புறம் ஏன் கேட்கற ரோஜா”
”ப்ச் எதுக்கு இப்படி நடந்துக்கறீங்க இது தப்பு”
”எது தப்பு“
”நீங்க என்கிட்ட ரொம்பவே உரிமை எடுக்கறீங்க அதைச் சொன்னேன்”
”எனக்கு அது தப்பா தெரியலையே நீ எனக்கு உரிமைப்பட்டவள், என் முறைபொண்ணு நீ“
”எது முறை பொண்ணா யார் சொன்னது அப்படி“
”யார் சொன்னா நீ ஒத்துக்குவன்னு சொல்லு அவங்களையே சொல்ல வைக்கிறேன்”
”சே உங்களோட பெரிய தொல்லையா போயிடுச்சி”
”அது இருக்கட்டும் ஆமா நீ ஆபீசுக்கு வர்றியா இல்லை ஸ்கூலுக்கு போறியா“