அனைவரும் ஆபீஸ் வந்ததும் செல்லப்பாதான் வாசலில் காத்திருந்தான் ரோஜா வரவும் செல்லப்பா இளப்பமாக சிரித்தபடியே
”வா வா ரோஜா இன்னியில இருந்து உன் சுதந்திரம் உன்னை விட்டு போயிடுச்சி, எப்பபாரு வெங்கி சார்கூடவே இருப்பல்ல இனி அவர் நிழலை கூட உன்னால தொட முடியாது, ஆனந்த் சார் உன்னை வைச்சி செய்யப் போறாரு, நீ கதறி அழப்போற அதை நான் பார்த்து சந்தோஷப்படப்போறேன் எப்படி” என நக்கலுடன் சொல்ல அவளுக்கு வந்ததே கோபம் பட்டென அவரின் கன்னத்தில் ஒரு அறை அறைந்துவிட்டு நிற்காமல் விறுவிறுவென உள்ளே சென்றாள்
அவள் அடித்ததை அவர் சற்றும் எதிர்பார்க்கவில்லை, ஒரு நொடியில் நடந்துவிட்ட நிகழ்வால் மிகவும் அவமானத்தில் உளன்றார் அடுத்து ஆனந்த் வண்டி வரவும் ரோஜா தன்னை அடித்ததை பற்றி அவனிடம் புகார் வாசிக்க தயாரானான். ஆனந்தும் வண்டியை விட்டு இறங்கி வரவும் அவனிடம்
”சார் சார் அந்த ரோஜாவை பாருங்க சார் என் கன்னத்தில படார்ன்னு அறைஞ்சிட்டு போயிட்டா” என சொல்ல அவன் உள்ளுக்குள் சிரித்தபடியே வெளியே காட்டிக் கொள்ளாமல் கோபமுடன் முகத்தை பொய்யாக வைத்துக் கொண்டு
”அப்படியா எதுக்கு அவள் உங்களை அறைஞ்சா” என கேட்க அவனோ
”நான் எதுவும் செய்யலை சார், நான் பாட்டுக்கு நின்னுக்கிட்டு இருந்தேன் அவளா வந்து என்னை அடிச்சிட்டுப் போறா”
”அப்படியா ஓகே விடுங்க செல்லப்பா அதான் நான் வந்துட்டேன்ல, அவளை என்ன ஏதுன்னு நான் கேட்கறேன் நீங்க கவலையேப்படாதீங்க” என சொல்லிவிட்டு அவன் ரோஜாவை பார்க்கச் செல்ல செல்லப்பாவோ
”ரோஜா வசமா மாட்டினியா, எவ்ளோ திமிரு உனக்கு, என்னையே அடிக்கறியா இப்ப பாரு உன் நிலைமை எவ்ளோ மோசமாக போகுதுன்னு, உனக்கு இதெல்லாம் தேவைதான்,