”அட என்ன மாமா இப்படி பேசறீங்க, எனக்காக நீங்க ரோஜாவை பார்த்திருக்கீங்க அதுக்கு நீங்க எனக்கு உதவி செய்வீங்கன்னு பார்த்தா நெகட்டிவ்வா பேசினா எப்படி மாமா”
”உதவியா என்ன உதவி செய்யனும்”
”சிம்பிள் மாமா ரோஜாவை எனக்கு கரெக்ட் பண்ணிக் கொடுங்களேன்“
“டேய் நான் உன் மாமாடா, உன் அக்கா இதை கேட்டா உன்னை திட்டுவா”
”வாய்ப்பில்லை அக்காவுக்கு என் மேல பாசம் அதிகம், அக்காவே இதைதான் செய்ய சொல்லி உங்ககிட்ட சொல்வாங்க வேணும்னா நான் அக்காகிட்ட பேசி பார்க்கவா” என போன் எடுக்க தடுத்தான் வெங்கட்
”ஆஆஆஆ உன்னால என் நிம்மதியே போயிடுச்சி கிளம்பு முதல்ல”
”ரோஜா எங்க“
”அவள் போய் அரைமணி நேரம் ஆகுது கிளம்பு” என அதட்டிவிட்டு வெங்கி செல்ல ஆனந்தும் காரில் ஏறி ஆபீஸ் நோக்கி பயணித்தான். பயணிக்கும் போதும் ரோஜாவை பற்றி நினைத்துக் கொண்டே மகிழ்ச்சியுடன் சென்றான்
ஆனால் ரோஜாவோ வண்டியில் செல்லும் போதே கவலையுடன் இருந்தாள், அவளுக்கு ஆனந்தை பிடிக்கும் ஆனால் அவன் ஆரம்பத்தில் அவளிடம் நடந்துக் கொண்ட முறையில் அவளுக்கு அவன் மீது வெறுப்பே வந்தது ஆனால் இப்போது அவனே அவளை விரும்புவதாக சொல்லும் போது அவளுக்கு என்ன முடிவெடுப்பது என தெரியவில்லை, அவள் விரும்பிய ஒருவனை மறக்க முடியாமல் தவித்தாள், அதற்காக அவனை விட்டு விலகவும் மனம் வரவில்லை, அவனுடன் இருக்கவே அவளின் மனம் ஏங்கியது ஆனால் என்ன செய்வது மூளைக்கும் மனதிற்கும் இடையே பெரிய யுத்தமே நடந்தது அதில் அவள் குழம்பி தவித்தாள்.