”இப்படி பேசி பேசி எத்தனை பேரை மயக்கினீங்க”
”ஆமா நான் பெரிய மன்மதன் பேசி ஆளை மயக்கறதுக்கு, ரூபாவா என்னை காதலிக்கிறேன்னு வந்தா ஆனா நான் உன்னை விரும்பி வந்திருக்கேன்“
“ஓஹோ அப்போ நீங்க என்னை காதலிக்கிறீங்க”
”எஸ்”
”இதை நான் நம்பனும்“
”எஸ்“
”அதெப்படி நேத்து வரைக்கும் ஒருத்தியை மனசார காதலிச்சிட்டு, அவளை அப்படியே மறந்து இன்னிக்கு வேற ஒருத்தியை காதலிக்க முடியுது”
”முடியுதே நான் ஒண்ணும் ஒருத்தியை காதலிச்சி அவள் இருக்கறப்பவே இன்னொருத்தியை காதலிக்கலை, டபுள்கேம் விளையாடலை, இப்பதான் தெளிவா இருக்கேன் என் வாழ்க்கைன்னா அது நீ மட்டும்தான்னு“
”இதை நான் நம்பனுமா“
”நீ நம்ப நான் என்ன செய்யனும்”
”என்னை விட்டா போதும்”
”எனக்காக வெங்கி மாமா உன்னை பார்த்து வைச்சிருக்காரு, நீ கூட அன்னிக்கு வருத்தப்பட்டு பேசினியே, கண்கள் கலங்கி கண்ணீரோட நீ நின்னப்ப உன் கண்ணீர்ல தெரிஞ்சதே அந்த காதல், அதுல கவரப்பட்டு வந்து உன் முன்னாடி இப்படி ஹீரோ போல நிக்கறேன் நீதான் என் ஹீரோயின் எப்படி“