"இந்து..." என கீதா ஏதோ சொல்ல முயற்சி செய்ய, காஞ்சனா அவளை தடுத்தாள்.
"இரு கீதா... ஏன் இந்து அப்படி சொல்ற?"
"பின்ன எங்கே போனாலும் கீதா அக்காவை தான் உங்க கூட கூட்டிட்டுப் போறீங்க... இன்னைக்கு வரைக்கும் எங்கேயாவது என் கூட வரீயான்னு என் கிட்ட ஒருத் தடவையாவது கேட்டு இருக்கீங்களா???"
"தப்பு தான் சின்ன மருமகளே!! இன்னைக்கு கோவிலுக்கு என் கூட வரீயா???" என்றாள் காஞ்சனா புன்னகையோடு.
"சஞ்சீவ் வருவார் அத்தை... நானே..."
"இந்த கதை எல்லாம் வேண்டாம் கீதா அக்கா... ஏன் ராஜீவ் வர மாட்டாரா?" என்று கீதாவின் பேச்சில் குறுக்கிட்டுக் கேட்டாள் இந்து.
"அதுவும் சரி தானே கீதா... இன்னைக்கு இந்துவை என்னோட கூட்டிட்டுப் போறேன்..." என்றாள் காஞ்சனா.
"சூப்பர் அத்தை.... நான் ரெடி... நான் தான் இன்னைக்கு உங்க பார்ட்னர்...” என்ற இந்து, கீதா பக்கம் திரும்பி, ”கீதா அக்கா, சத்யம்ல புது படம் ஏதோ வந்திருக்காமே... என் கிட்டே இரண்டு டிக்கெட் இருக்கு போறீங்களா? ராஜீவ் கிட்ட கேட்டு சொல்லுங்க..." என்றாள்.
ஒன்றும் தெரியாதவள் போல் முகத்தை வைத்துக் கொண்டு கேள்வி கேட்ட இந்துவை சற்றே அதிர்ச்சியாகப் பார்த்தாள் கீதா. இந்து கண்ணில் மின்னிய குறும்பில் இருந்தே விஷயம் புரிப்படவும், கீதா முகத்தில் சற்றே நாணம் கலந்த புன்னகை தோன்றியது.
"ஆமாம் கீதா, இனிமேல் எனக்கு பார்ட்னர் இந்து தான்... நீயாச்சு ராஜீவ் ஆச்சு... இந்து டிக்கெட் காலி ஆகிடப் போகுது..." என்றாள் காஞ்சனா!