"சரி இந்து. ஆனால், உனக்கும் இப்போ தானே கல்யாணம் ஆச்சு... நானே தனியா போய்க்கிறேன்..."
"அடடா... போதும் அத்தை இந்த ஓவர் சென்டிமென்ட் எல்லாம்... ஃபர்ஸ்ட் கீதா அக்கா விஷயம், அப்புறம் தான் நம்முடையது எல்லாம்... அதுவும் இல்லாம, அக்காக்கு குழந்தை பிறந்தா தான் எனக்கும் ரூட் கிளியர் ஆகும்...”
இந்துவின் பேச்சைக் கேட்டு சிரித்துக் கொண்டிருந்த காஞ்சனா, இப்போது அவளை கேள்வியுடன் பார்த்தாள்!
“என்ன அத்தை பார்க்குறீங்க? கீதா அக்காக்கு குழந்தை பிறந்தப் பிறகு தான் நாங்க குழந்தை பத்தி யோசிக்குறதுன்னு பேசி முடிவு செஞ்சு வச்சிருக்கோம்..."
கிடைத்த வாய்ப்பில் தன மேல் கேள்விகள் வராதிருக்கவும் சொல்லி வைத்தாள் இந்து!
காஞ்சனாவிற்கும் மகிழ்ச்சியே... தன்னுடைய இரண்டு மருமகள்களுக்கு இடையில் இருக்கும் ஒற்றுமையும், அன்பும் அவளை சந்தோஷப்படுத்தியது.
🌼🌸❀✿🌷
அன்று மதிய உணவு முடித்து, மாமியாரும் மருமகள்களுமாக எதையோ பேசிக் கொண்டிருந்த போது,
"அத்தை, உங்களுக்கு என்னை பிடிக்குமா, கீதா அக்காவை பிடிக்குமா?" எனக் கேட்டாள் இந்து.
"ரெண்டுப் பேரையும் பிடிக்கும்… இது என்ன இந்து கேள்வி?" என்றாள் காஞ்சனா.
"ஹுஹும்.... உங்களுக்கு அக்காவை மட்டும் தான் பிடிக்கும்."