தொலை காட்சியில் ஏதோ சீரியல் ஓடிக் கொண்டிருந்தது. அதில் மாமியார் மருமகளை எதையோ சொல்லி திட்டி கொண்டிருந்தாள்.
"இந்த சீரியல் உங்களுக்கு ரொம்ப பிடிக்குமா அத்தை?" என பேச்சை தொடங்கினாள் இந்து.
"பிடிக்கும்னு இல்லை இந்து, நேரம் போகனுமே," என்றாள் காஞ்சனா டிவியில் இருந்து விழிகளை திருப்பாமலே!
"ம்ம்ம்.... இந்த மாதிரி சீரியல் பார்த்து தான் நீங்க ரொம்ப கெட்டுப் போயிட்டீங்க அத்தை..."
"நானா? ஆமாம் நான் சின்ன குழந்தை பாரு?" என்றாள் காஞ்சனா புன்முறுவலுடன்.
"பின்ன நீங்க நல்ல மாமியாரா என்ன? வெரி பேட் மாமியார்..."
காஞ்சனாவின் முகத்தில் திகைப்பு தென்பட்டது. பின் சுதாரித்துக் கொண்டு இந்து பக்கம் பார்த்து,
"அப்படியா? ரொம்ப பேட் தான்! உனக்கு ஒரு இரண்டு அடி போடாமல் இருக்கேன் பாரு..." என்றாள்.
"நான் ஒன்னும் சும்மா சொல்லலை அத்தை," என்றாள் இந்து, வார்த்தைகளில் இருந்த கறார் தன்மை முகத்தில் பிரதிபலிக்காமல்!
"இந்து, சீரியல் பார்க்கும் போது தொல்லை செய்யாதே..."
"பார்த்தீங்களா, நான் சீரியஸா பேசிட்டு இருக்கேன்... நீங்க சீரியல் சீரியல்னு பறக்குறீங்க..."
"சரி இந்து சொல்லு... அப்படி என்ன பேடா செஞ்சேன் நான்?"