"ரொம்ப பயங்கர பார்ஷியாலிட்டி அத்தை..."
"யாரு நானா???"
"ஆமாம்..."
"அப்படி என்ன செஞ்சேன்??"
"உங்களுக்கு என்ன தான் இருந்தாலும் கீதா அக்கா தான் செல்லம்... நான் செகன்ட் தான்..."
காஞ்சனாவின் முகத்தில் இருந்த புன்னகை பெரிதானது.
"ஆமாம், இப்போ என்ன? கீதா தான் எனக்கு ரொம்ப செல்லம்..."
"ரொம்ப நல்லதா போச்சு அதனால தானே அவங்களை இப்படி தொல்லை செஞ்சுட்டே இருக்கீங்க?"
"தொல்லையா???"
என்ன என்று புரியாமல் குழப்பத்துடன் ஒலித்த அந்த கேள்வியை கவனித்த இந்து,
"ஆமாம் அத்தை... உங்களுக்கு பாட்டி ஆகும் ஆசையே இல்லையா???" என்றாள் சீரியஸாக!
"இது என்ன கேள்வி இந்து? ராஜீவ் கிட்டேயும், கீதா கிட்டேயும் எத்தனை தடவை பேசியாச்சு.... ஆனால் இதில் நான் எங்கே வந்தேன்?"
"அத்தை, கீதா அக்காக்கும் ராஜீவுக்கும் கல்யாணமாகி இரண்டு வருஷம் முடிஞ்சுப் போச்சு... ஆனால் நீங்க அவங்களை இன்னமும் ஃப்ரீயா விட மாட்டேங்குறீங்க... எப்போ வேணா யார் வேணா போய் அவங்களை கூப்பிடுறாங்க, டிஸ்டர்ப் செய்றாங்க... இப்போ தான் நான் இருக்கேனே, என் கூட சாப்பிடலாம் தானே நீங்க? அக்காவும், ராஜீவும் தனியா வேணா