அவனும் என்னவோ ஏதோவென வந்தான்
”அப்பா என்னப்பா ஏதோ அவசரம் வான்னு கூப்பிட்டீங்க, என்னாச்சிப்பா ஏதாவது பிரச்சனையா“
”ஆமாம்டா பிரச்சனைதான்”
”என்ன பிரச்சனைப்பா”
”உங்கம்மா சாமியாரை போய் பார்த்துட்டு வந்தா“
”சரி”
”அந்த சாமியார் உனக்கு ஏற்கனவே கல்யாணம் ஆயிடுச்சின்னு சொல்லி வைச்சிருக்கான் அது பத்தி பேசதான் கூப்பிட்டேன்” என சொல்ல ஈஸ்வரன் அதிர்ந்தான்
”கல்யாணமா“
”ஆமாம் அப்படித்தான் அந்த சாமியார் சொல்லி வைச்சிருக்காரு, நீ என்ன நினைக்கற இதைப்பத்தி”
”ப்ச் அப்பா சாமியாரை போய் நம்பலாமா” என சொல்ல சுலோ வந்தாள்
”அப்படி சொல்லாத ஈஸ்வரா அந்த சாமியார் புகழ்வாய்ந்தவரு, 12 வருஷமா இமயமலையில தவம் இருந்து இப்பதான் ஊருக்கு வந்தாரு, உன் கல்யாண விசயத்தில அவர் உறுதியா சொல்றாரு, எனக்கு பயமாயிருக்கு ஈஸ்வரா உண்மையை சொல்லு உனக்கு கல்யாணம் ஆயிடுச்சா” என கேட்க அவனோ நொந்துப் போனான்
”அம்மா என்னம்மா நீயும் முட்டாள்தனமா கேள்வி கேட்கற, இதெல்லாம் ஒரு பிரச்சனைன்னு வியாபார நேரத்தில அவசரமா போன் போட்டு வரச் சொல்லி கேள்வி கேட்டுக்கிட்டு நான் கிளம்பறேன் அம்மா”