”ஈஸ்வரா நாளைக்கு உனக்கு நிறைய வேலையிருக்கா”
”ஏன்பா கேட்கறீங்க“
”இல்லை எனக்கு ஒரு முக்கியமான வேலையிருக்கு, வண்டி வேணும் அதான் கேட்டேன்“
”வண்டிதானே தாராளமா எடுத்துக்குங்கப்பா”
“சரி சரி”
”ஆமா அது என்ன முக்கியமான வேலை“
”ஜோசியரை பார்க்கலாம்னு”
”ஜோசியரா எதுக்கு”
”ம் கல்யாண விசயமா பேசலாம்னு“ என சொன்னதும் ஈஸ்வரனின் முகம் கருத்துவிட்டது, அதற்கு மேல் அவனுக்கு அதை பற்றி பேச விருப்பமில்லை, கடகடவென சாப்பிடலானான். ஆனால் கருணாவும் சத்தியாவும் உற்சாகமானார்கள்
”கல்யாணமா யாருக்குப்பா” என கருணா கேட்க சுலோவோ
”வேற யாருக்கு உனக்குதான்”
”ஓ அப்படியா ஆமா பொண்ணை பார்த்துட்டீங்களா என்ன” என கேட்டதும்தான் தாமதம் சுலோ உளறினாள்
”அதுவா பொண்ணெல்லாம் நாம பார்க்க வேணாமாம் பொண்ணே தேடி வருமாம்”
”தேடி வருமா அப்படின்னு யார் சொன்னது”