அவன் கண்டறிந்து அதை சரிசெய்வதற்குள் அவளோ அவனை திட்டிக் கொண்டே இருந்தாள்
அவள் கத்திக் கொண்டே இருக்க இருக்க அவனோ ஒருவழியாக பிரச்சனையை சரிசெய்து அந்த வண்டியை ஸ்டராட் செய்துவிட்டு சட்டென அங்கிருந்து சென்றுவிட்டான்.
அவளுக்கு நிம்மதியானது. வண்டியை எடுத்துக் கொண்டு புறப்பட அவள் பின்னாலேயே தனது புல்லட்டில் வந்தான் ஈஸ்வரன்
”பின்னாடியே வர்றதை பாரு, இதுக்கொண்ணும் குறைச்சல் இல்லை” என அவனுக்கே கேட்கும்படி திட்டிக்கொண்டே பயணப்பட்டாள், அவளது தெரு வரும் வரை ஈஸ்வரன் பின்தொடர்ந்தான், அதன்பின் அவன் தன் வீடு இருக்கும் தெருபக்கம் திரும்பிச் சென்றான், புல்லட்டின் சத்தம் நின்றதும் தனது வண்டியை நிப்பாட்டிவிட்டு திரும்பி பார்த்தாள் பூங்கொடி, அங்கு ஈஸ்வரன் இல்லை என்றதும் சோர்ந்துப் போய் தொய்வுடன் தனது வீட்டிற்குச் சென்றாள்
அவளுக்காக அனைவரும் கவலையுடன் காத்திருந்தார்கள் அவளும் அவர்களைக் கண்டு புன்னகைக்க அவர்களுக்கு நிம்மதியாகிப் போனது. குழந்தைகள் இரண்டும் அவளிடம் உற்சாகமாக வந்தார்கள், அதில் ரம்யாவை பூங்கொடி தூக்கிக் கொண்டு கொஞ்சினாள் அவள் வண்டியின் பக்கவாட்டில் ஒரு பை இருக்க அதை திவ்யா எடுத்தாள், அதில் புடவை காய்கறி மளிகை இனிப்பு என இருந்தது. அதை எடுத்து
”அத்தை இதெல்லாம் என்ன” என கேட்க பூங்கொடி திடுக்கிட்டாள்.
அதற்குள் அந்த பை அவனது அண்ணியின் கைகளுக்குச் சென்றது
”அட புடவையா சூப்பர் பூங்கொடி, நாளைக்கு எனக்கு கல்யாண நாள்ன்னு தெரிஞ்சிதானே புடவை வாங்கிட்டு வந்த, எனக்குத் தெரியும் என் மேல உனக்கு எவ்ளோ பாசம்னு இதை நான் நாளைக்கு கட்டிக்கிறேன்” என சொல்லிவிட்டு புடவையை எடுத்துக் கொள்ள அதை அவசரமாக பறித்துக் கொள்ள பூங்கொடியின் கைகள் பரபரவென துடித்தது ஆனால் முடியாதே என நினைத்து அடங்கிப் போனாள். அவளுக்கே தெரியாது நாளை அண்ணனுக்கு திருமண நாள்