சென்றுவிட மூர்த்தி புல்லட்டில் ஈஸ்வரனின் கடையை நோக்கி விரைந்தார்.
மறுபக்கம் ஈஸ்வரனின் தாய் சுலோச்சனாவோ தன் மகன்களின் ஜாதக புத்தகத்தை கையில் வைத்துக் கொண்டு பயபக்தியுடன் ஒரு சாமியார் முன் அமர்ந்திருந்தார்.
”12 வருஷம் கழிச்சி வந்திருக்கீங்க உங்களை பார்த்ததுல ரொம்ப சந்தோஷம் சாமி”
”இருக்கட்டும் 12 வருஷமா இமயமலையில தவம் இருந்து இப்பதான் வந்தேன் அப்புறம் என்ன விசயம்“
”என் பையன்கள் ஜாதகம் கொண்டு வந்திருக்கேன், அவங்களுக்கு கல்யாணம் செய்யனும் அதைப்பத்தி கேட்க வந்தேன்”
”12 வருஷத்துக்கு முன்னாடியே உன் பையன்கள் ஜாதகத்தை பார்த்து பலனும் சொல்லிட்டேனே பிறகென்ன“
”சொன்னீங்க சாமி இப்ப வரைக்கும் அவங்களுக்கு கல்யாணம் கூடி வரலை அதான் பயமாயிருக்கு”
”அப்படியா எங்க கொடு பார்க்கிறேன்” என சொல்ல சுலோச்சனாவும் ஜாதக புத்தகங்களை தர அதை வாங்கி சாமியார் பார்த்தார். பொறுமையாக ஒவ்வொரு ஜாதகமாக பார்த்தபடி வந்தவர் ஈஸ்வரனின் ஜாதகத்தை பார்த்து திடுக்கிட்டு
”இது யாரோடது“
”அதுவா சாமி அது என் கடைசி பையன் ஈஸ்வரனோடது“
“கடைசி பையனுக்கு கல்யாணம் ஆயிடுச்சி போல இருக்கு“
”கல்யாணமா இல்லையே இன்னும் மூத்தவனுக்கே ஆகலை அப்படியிருக்கறப்ப கடைசி