”அதுதான் யோசனையா இருக்கும்மா, ஈஸ்வரனும் பெரிசா எதையும் சொல்லலை அதுக்காக அவன் மேல சந்தேகமும் படமுடியாதே, நம்மளை மீறி அவன் எந்த தப்பும் செய்ய மாட்டான், அதுலயும் கல்யாண விசயம் எவ்ளோ முக்கியமானது, அதுல எல்லாம் அவன் விளையாட மாட்டான், கண்ணு முன்னாடியே இருக்கறவன் மேல எப்படி சந்தேகப்படறது சொல்லு“
”சரியா சொன்னீங்க மாமா, அப்புறம் எதுக்காக ஜோசியர்கிட்ட போகனும் அவர் மேல உங்களுக்கு சந்தேகம் இருந்தா தாராளமா ஜோசியரை போய் பாருங்க இல்லை அவரை முழுசா நம்பினீங்கன்னா சாமியார் சொன்னதை மறந்துட்டு கருணா மாமாவோட கல்யாணத்தை பத்தி யோசிங்க மாமா” என சொல்ல அவரும் பலமாக யோசித்தார்
”என்ன மாமா இப்படி யோசிக்கறீங்க, அப்ப உங்களுக்கு அவர் மேல நம்பிக்கையில்லையா சந்தேகப்படறீங்களா“
”சே சே சந்தேகம்லாம் இல்லைம்மா, அவன் மேல எனக்கு முழு நம்பிக்கையிருக்கு, உன்கிட்ட பேசின பின்னாடிதான் என்னோட குழப்பம்லாம் தீர்ந்துடுச்சி நான் ஜோசியர்கிட்ட போகலை புல்லட்டை கொண்டு போய் ஈஸ்வரன்கிட்ட கொடுத்துட்டு வீட்டுக்குப் போறேன்”
”நல்ல முடிவு மாமா, பத்திரமா போய் வாங்க மாமா” என வாய் நிறைய சிரிப்புடன் வழியனுப்ப அவளின் சிரிப்பு அவருக்கும் ஒட்டிக் கொண்டது, கவலையாக இருந்தவர் இப்போது புன்னகையுடன் சென்றார்.
Like & Follow our Facebook Page to be notified of the new episodes immediately.
தொடரும்...