பையனுக்கு மட்டும் எப்படி ஆகும்”
“இல்லைம்மா நல்லாவே தெரியுது உங்க கடைசி பையனுக்கு கல்யாணம் ஆயிடுச்சி, மாங்கல்ய பலம் நிறைஞ்சிருக்கற பொண்ணை கல்யாணம் செய்துக்கிட்டதால உங்க பையனுக்கு ஆயுள் கெட்டி, எந்த கெடுதலும் நடக்காது ஏறுமுகமாதான் இருக்கும்”
”இல்லைங்க அவனுக்கு இன்னும் கல்யாணம் ஆகலைங்க சாமி”
”இதப்பாரும்மா நான் சொன்னது சொன்னதுதான் போய் அவனை விசாரி”
”விசாரிக்கிறேன் சாமி”
”மத்த பையன்களுக்கு இன்னும் ஒரு வருஷத்துக்குள்ள அடுத்தடுத்து கல்யாணம் நடந்து முடிஞ்சிடும், பொண்ணு வீட்டுக்காரங்களே தேடி வந்து பேசுவாங்க சட்டு சட்டுன்னு எல்லாம் கைகூடி வரும், நீயா பொண்ணை தேடி அலைய வேணாம் தானா வர்றதை ஏத்துக்க அது போதும்” என சொல்ல சுலோச்சனாவும் நன்றி சொல்லிவிட்டு தட்சிணையையும் தந்துவிட்டு அவசர அவசரமாக அங்கிருந்து கிளம்பி வீடு திரும்பினார் அதற்குள் மாலை வந்துவிட்டது. மூர்த்தியும் வீட்டில் இருந்தபடியால் அவரிடம் சாமியார் சொன்னதை சொல்ல அவரும் அதிர்ந்தார்
”சுலோ என்ன பேசற நீ, அதெப்படி நமக்கு தெரியாம ஈஸ்வரனுக்கு கல்யாணம் ஆயிருக்கும்“
”ஆயிடுச்சின்னு உறுதியா சொல்றாருங்க அந்த சாமியாரு, எனக்கென்னவோ பயமாயிருக்குங்க, அவனை கூப்பிட்டு விசாரிங்க”
”விசாரிக்கிறேன் இதை பத்தி மத்த பையன்கள்கிட்ட எதுவும் சொல்லிடாத வீணா அண்ணன் தம்பிக்குள்ள சண்டையோ பிரிவோ வந்துடப்போகுது”
”இல்லைங்க நான் எதையும் சொல்ல மாட்டேன்” என சொல்ல மூர்த்தியோ ஈஸ்வரனுக்கு போன் போட்டு அவனை அவசரமாக வீட்டிற்கு வரவழைத்தார்.