"தெரியாமல் செஞ்ச தப்புக்கும் கூட பரிகாரம் செஞ்சிடலாம்," என்றான் சரவணன் யோசனையுடன்!
"டேய், நீ தேவை இல்லாம எதையாவது செஞ்சு புதுசா பிரச்சனையை கொண்டு வராதே!"
"அதெல்லாம் ஒன்னும் வராது! சரி ஜானு, நான் கிளம்புறேன்! இன்னும் எவ்வளவு பேரை இன்வைட் செய்யனும் பார்!"
சரவணன் நீட்டிய பேப்பரில் பெரிய பட்டியல் இருந்தது!
"இவ்வளவு பேரையும் நீயே போய் பர்சனலா இன்வைட் செய்ய போறீயா?"
"இல்லை இல்லை! என் வேலை இங்கே சர்க்கிள் ஆகி இருக்க இந்த இருபது பேரை இன்வைட் செய்றது மட்டும் தான். ப்ளூ சர்க்கிள் என்னோட அப்பா லிஸ்ட்... கிரீன் சர்க்கிள் என் மாமனார் லிஸ்ட்!"
"நீ யாரு, கலக்குடா சரோ!"
சரவணன் கையில் வைத்திருந்த பட்டியலில் குமார் – வசந்தி என்ற பெயர் இருந்ததையோ, சரவணன் செய்ய நினைக்கும் பரிகாரத்தினால் ஏற்படப் போகும் பிரச்சனைகளை பற்றியோ அறியாமல், விக்கிராந்த் ஒரு மரத்தின் மீது சாய்ந்து நின்றபடி, ப்ரியாவிற்கு குறுஞ்செய்தி அனுப்பி வைத்தான்.
🌼🌸❀✿🌷
"விக்கின்ற பேருல ஏதோ வசியம் இருக்கு! நீ என்ன நினைக்குற ப்ரியா?"
ப்ரியா ஸ்ரீயை முறைப்பதுப் போல் பார்த்தாள்!