தொடர்கதை - நெஞ்சுக்குள்ளே இன்னாருன்னு - 13 - சசிரேகா
தாமரை வந்த விசயத்தை அறிந்த வீட்டில் இருந்தவர்களும் வியப்பாக பார்த்தனர். தாமரை இல்லாத நேரம் வீட்டை கவனித்துக் கொண்டிருந்த கீதாவும் தாமரை வரவும் சந்தோஷப்பட்டு தன் மாமனாரிடம்
”எப்படியோ அத்தை திரும்பி வந்துட்டாங்க இந்த முறை அவங்க எங்கயும் போக மாட்டாங்க மாமா” என அவள் சொல்ல சுந்தரத்துக்கு புது தெம்பு கிடைத்தது ஆனாலும் தாமரையின் தியானத்தைக் கண்டு சற்று குழம்பித்தவித்தார்.
தாமரையை விட்டு விட்டு வீட்டுக்கு வந்தவன் கீர்த்தனாவைப் பார்க்க அவளோ ரெடியாக டிபன் கொண்டு வந்து வைக்கவும் அமைதியாக சாப்பிட்டு எழுந்தான். சரண்யாவைப் பார்த்தான் அவள் சாப்பிடாமல் இருக்கவே
”சரண்யா சீக்கிரம் சாப்பிடு, ஹாஸ்டல் கட்டற இடத்துக்கு போகனும்” என அமைதியாக சொல்ல அவள் உடனே சிரித்துக் கொண்டே வேகமாகச் சாப்பிடலானாள். கீர்த்தனா தேவாவிடம்
”பாட்டி என்ன ஆனாங்க எதுவுமே பேசலையா அவங்க”
“விடு அவங்களா பேசினா பார்க்கலாம், நீ பத்திரமா இருப்பியா இல்லை நீயும் என் கூட வர்றியா”
“இல்லை நான் வீட்டு ப்ளான் வரையனும்”
“அதான் ஏற்கனவே வரைஞ்சிட்டியே”
“அதுல குறை இருக்குன்னு மாமா சொன்னாரே”
“அதனால”
“இன்னொரு ப்ளான் வரையறேன்”