தொடர்கதை - நெஞ்சுக்குள்ளே இன்னாருன்னு - 06 - சசிரேகா
காலை 5 மணி
காலையில் எழுந்ததும் தேவா அவசரமாக குளித்துவிட்டு வந்தான். அதற்குள் தாஸ் ரெடியாக இருக்கவே இருவருமாக வீட்டை விட்டு வெளியேறி நேராக கோயிலுக்குச் சென்றார்கள்.
அங்கு எந்த புடவையை சரண்யா கட்டிக்கொண்டாளோ அதே போல இன்னொரு டிசைன் செய்யப்பட்ட புடவையில் கீர்த்தனா அழகாக இருந்தாள். அவளைப் பார்த்தவுடன் கோயிலையும் கடவுளையும் மறந்தவன் அப்படியே சிலையாக நிற்க அவன் முன் வந்து நின்றாள் கீர்த்தனா
”நான் ரெடி”
”நானும் ரெடிதான் தாஸ், அந்த தாலியை கொடு இப்பவே கட்டிடறேன்“
”என்ன அவசரம்” என அவள் சிணுங்க அவனோ
”ஹனிமூன் போலாம்னு” என சொல்ல தாஸ் உடனே அவனை உலுக்கி முடியாது என தலையாட்ட
”ஏன்டா இப்படி நான் சந்தோஷமாயிருந்தா உனக்கு பிடிக்காதா” என சொல்ல தாஸ் கீர்த்தனாவின் கையை பிடித்து அழைத்துக் கொண்டு கோயிலுக்கு முன்புறமாக இருந்தவளை காருக்குள் அமர வைத்தான். தேவாவும் நொந்துக் கொண்டே காருக்குள் ஏறி காரை புது வீட்டு கிரகப்பிரவேசத்திற்கு விட்டான்.
அங்கு சிறப்பாக அனைத்து ஏற்பாடுகளும் செய்தார்கள். கணபதி பூஜை, பால் காய்ச்சுவது என அனைத்தும் முடிந்த நிலையில் இந்த மூவரும் உள்ளே சென்றார்கள். அந்த வீட்டை கட்டிய மேஸ்திரிகள், உதவிய சித்தாள்கள் கூட அங்கு இருந்தார்கள்.
வீட்டின் ஓனர் அனைவருக்கும் துணிமணி எடுத்துக் கொடுத்தார். அப்படியே தாஸ், தேவா