தொடர்கதை - உனது கண்களில் எனது கனவினை காண போகிறேன் - 13 - பிந்து வினோத்
This is a Chillzee Originals Novel episode. Visit Chillzee Originals Novels page for other current Chillzee Original stories.
என்றும் இல்லாத அதிசயமாக உதட்டில் சின்ன புன்னகை மின்ன யோசனையில் ஆழ்ந்திருந்த ப்ரியாவை ஆச்சர்யமாக பார்த்தாள் ஸ்ரீநிதி.
“ப்ரியா, நீயா ஸ்மைல் செய்ற? அம்மாடியோ அப்படி என்ன அதிசயம் நடந்தது இன்னைக்கு?”
காலையில் எதிர்பாராமல் ஃபீடிங் பாட்டிலோட வந்து நின்ற விக்கிராந்தை பற்றிய சிந்தனையில் ஆழ்ந்திருந்த ப்ரியா, பதில் சொல்லாமல் ஸ்ரீயை ஒரு பார்வை பார்த்தாள்!
“கடைசியா எப்போ நீ சிரிச்ச ப்ரியா? ஒரு, ஒரு வருஷம் இருக்குமா? ம்ம்ம்... இல்ல இரண்டு வருஷம் இருக்கும்னு நினைக்கிறேன்...”
“இரண்டு வருஷமா??? நான் இதுவரை அவ சிரிச்சு பார்த்ததே இல்லை...” என்றாள் மேல்நிலை இயற்பியல் ஆசிரியையான கோகிலா!
ப்ரியாவின் அமைதி, ஒதுக்கம் அனைத்தையும் மீறி, அவளுடன் ‘கொஞ்சமேனும்’ பேசுபவர்கள் ஸ்ரீநிதியும், கோகிலாவும் மட்டும் தான்.
தரையில் கொட்டிய சில்லறை காசாக எப்போதும் கலகல என இருக்கும் ஸ்ரீநிதி, ப்ரியா என்றில்லாமல் அனைவருடனுமே எளிதாக பேசுபவள் தான்...
ப்ரியா அந்த பள்ளியில் ஆசிரியையாக சேர்ந்த அதே நாளில் தான் கோகிலாவும் இயற்பியல் ஆசிரியையாக பணியில் சேர்ந்தாள். அன்று முதலே ஃப்ரீ பீரியட்கள், லஞ்ச் ப்ரேக் என ஒய்வு நேரங்களில் இருவரும் ஒன்றாகவே நேரத்தை செலவிட்டனர்...!
ஸ்ரீநிதி ஹையர் செகண்டரி கெமிஸ்ட்ரி டீச்சர் என்பதால் அவளும் ப்ரியா, கோகிலா இருந்த அதே ஸ்டாஃப் ரூமில் தான் எப்போதும் இருப்பாள்! அதை தவிர, அவர்கள் மூவருக்கும் கிட்டத்தட்ட ஒரே வயது என்பதாலும், ப்ரியா, கோகிலாவுடன் தானாகவே நட்புடன் பேசி பழக தொடங்கினாள் ஸ்ரீநிதி!
உயிர் தோழிகள் என்று சொல்லுமளவிற்கு இல்லையென்றாலும், அவர்கள் மூவருக்குள் மெலிதான நட்பு இழையோடி இருந்தது.