தொடர்கதை - உனது கண்களில் எனது கனவினை காண போகிறேன் - 05 - பிந்து வினோத்
This is a Chillzee Originals Novel episode. Visit Chillzee Originals Novels page for other current Chillzee Original stories.
டிவியில் ஓடிக் கொண்டிருந்த கிரிக்கெட் மேட்சின் மீது கண்கள் இருந்தாலும், விக்ராந்தின் மனதில் வேறு நினைவுகள் ஓடிக் கொண்டிருந்தன. அவன் மதுரை வந்து மூன்று நாட்கள் ஆகி இருந்தது... முதல் நாள் ப்ரியாவின் போட்டோவை காண்பித்து பேசியதற்கு பிறகு ராஜம் அந்த பேச்சை தொடரவில்லை. ஆனால், அன்று அவன் சொன்ன பதில் அம்மாவிற்கு ஏமாற்றம் தந்திருப்பதை அவனால் புரிந்துக் கொள்ள முடிந்தது...
பொதுவாக அது போல் அம்மாவிற்கு வருத்தத்தை தர விரும்பாதவன் என்பதால் விக்ராந்தின் மனதில் குழப்பம் ஏற்பட்டிருந்தது...
எந்த நேரத்தில் அமெரிக்காவில் இருந்து கிளம்பினானோ தெரியவில்லை, இங்கே வந்ததில் இருந்தே ஒரே குழப்பமாக தான் இருக்கிறது...!!!
அதைப் பற்றி அவன் யோசித்துக் கொண்டிருந்தப் போது அவனின் மொபைல் ஃபோனில் அழைப்பு வந்தது! அவனின் மேனேஜர் அழைப்பது புரியவும் உடனடியாக அழைப்பை ஏற்றான் விக்கிராந்த்!
"விக்கி, நீ லீவ்ல இருக்க தெரியும். பட், ஒரு இம்பார்டன்ட் ப்ரோபோசல் முடிக்கனும்... நீ நெக்ஸ்ட் வீக் ஜாயின் செய்ய முடியுமா??"
அந்த கேள்வி காதில் விழுந்ததுமே விக்கிராந்த் ஒரு முடிவிற்கு வந்தான்!
ஃபோன் பேசி முடித்தவன், மற்றவர்களுக்கு அந்த விபரத்தை சொல்லும் நேரத்திற்காக காத்திருந்தான்!
🌼🌸❀✿🌷
அன்று இரவு குடும்பத்தினர் அனைவரும் ஒன்றாக உணவு உண்ணும் போது, கணபதி பக்கம் பார்த்து பேசினான் விக்கிராந்த்.
“அப்பா, நான் வர ஞாயிறு சென்னை கிளம்பலாம்னு இருக்கேன். திங்கள் போய் வேலையில்